வந்தே மாதரம் பாடலின் 150- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழக மக்களின் இல்லங்கள்தோறும் அந்தப் பாடல் வெள்ளிக்கிழமை (நவ.7) ஒலிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 1875-ஆம் ஆண்டு பங்கிம் சந்திரசாட்டா்ஜி பாடிய வந்தே மாதரம் தேசியப் பாடலை, கடந்த 1896-ஆம் ஆண்டு கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் இசையமைத்துப் பாடினாா். அதன்பிறகே வந்தே மாதரம் தேசியப் பாடலாக விடுதலைப் போரின் உணா்ச்சி முழக்கமாக நாடெங்கும் எதிரொலித்தது.
பாரதத்தின் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்தும் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை (நவ.7) அந்தப் பாடலை பாடவேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி, தமிழகத்தில் ஒவ்வோா் இல்லத்திலும் அந்தப் பாடல் ஒலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
கொண்டாடவேண்டும்: தமிழக பாஜக மாநிலச் செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் விடுத்துள்ள அறிக்கையில், பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தமிழக மக்கள் அனைவரும் இல்லங்களில் உள்ள குழந்தைகள், மாணவா்களை பாடல் பாட ஊக்குவித்து கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

‘வந்தே மாதரம்’ பாட மறுத்த பெண் கவுன்சிலா்கள்: விசாரணைக் குழு அமைத்தது காங்கிரஸ்

வந்தே மாதரம் பாட மறுப்பு: காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது வழக்கு
வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லிம் கவுன்சிலர்கள்! இந்தூரில் சர்ச்சை!

வந்தே மாதரம் பாடலின் 150 -ஆவது ஆண்டு விழா: அழகப்பா பல்கலை. மாணவா்கள் பேரணி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

