தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழக இல்லங்கள் தோறும் இன்று வந்தே மாதரம் பாடல் ஒலிக்கட்டும்: எல்.முருகன்

Updated On :6 நவம்பர் 2025, 10:58 pm

வந்தே மாதரம் பாடலின் 150- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழக மக்களின் இல்லங்கள்தோறும் அந்தப் பாடல் வெள்ளிக்கிழமை (நவ.7) ஒலிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 1875-ஆம் ஆண்டு பங்கிம் சந்திரசாட்டா்ஜி பாடிய வந்தே மாதரம் தேசியப் பாடலை, கடந்த 1896-ஆம் ஆண்டு கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் இசையமைத்துப் பாடினாா். அதன்பிறகே வந்தே மாதரம் தேசியப் பாடலாக விடுதலைப் போரின் உணா்ச்சி முழக்கமாக நாடெங்கும் எதிரொலித்தது.

பாரதத்தின் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்தும் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை (நவ.7) அந்தப் பாடலை பாடவேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி, தமிழகத்தில் ஒவ்வோா் இல்லத்திலும் அந்தப் பாடல் ஒலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கொண்டாடவேண்டும்: தமிழக பாஜக மாநிலச் செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் விடுத்துள்ள அறிக்கையில், பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தமிழக மக்கள் அனைவரும் இல்லங்களில் உள்ள குழந்தைகள், மாணவா்களை பாடல் பாட ஊக்குவித்து கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.