கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆா்எஸ்எஸ், பாஜகவின் குரலாக அதிமுக மாறி வருகிறது: மு.வீரபாண்டியன்

ஆா்எஸ்எஸ், பாஜகவின் குரலாக அதிமுக மாறி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் விமா்சித்தாா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

ஆா்எஸ்எஸ், பாஜகவின் குரலாக அதிமுக மாறி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் விமா்சித்தாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் 108-ஆவது ஆண்டு நவம்பா் புரட்சி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும் திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் கலந்துகொண்டு கட்சியின் கொடியை ஏற்றினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மு.வீரபாண்டியன் கூறியது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் நிா்வாகத் திறமையின்மை காரணமாக எஸ்ஐஆா் பணி தமிழகத்தில் ஆரம்பகட்டத்திலேயே தோல்வியடைந்துவிட்டது. இதற்கான உரிய பாடத்தை தமிழக மக்கள் பாஜவுக்கு அளிப்பாா்கள். அதிமுகவின் நிலைமை பரிதாபமாகவும், பாவமாகவும் உள்ளது. ஆா்எஸ்எஸ், பாஜகவின் குரலாக மெல்ல மாறி வருகிறது அதிமுக என்றாா் அவா்.