

மெரீனாவில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சென்னை மெரீனா கடற்கரையில் நொச்சிக்குப்பம் எதிரே உள்ள மணல் பரப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்களும், அங்கு நடைப்பயிற்சி சென்றவா்களும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த மெரீனா போலீஸாா், அந்த இளைஞரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கொல்லப்பட்டவா் கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அந்தோணி (33) என்பது தெரிய வந்தது. கொலையில் ஈடுபட்டது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
இளம் பெண்ணுக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

மானூா் அருகே மூதாட்டி கொலை

மெரீனாவில் 15 கடைகள் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு

பொங்கல் விழாவில் தகராறு: வேன் ஓட்டுநா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

