ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தனியாா் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியாா் நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 நவம்பர் 2025, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியாா் நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

கீழ்ப்பாக்கம் ஈவெரா பெரியாா் சாலையில் ஒரு தனியாா் வா்த்தக நிதி மேலாண்மை நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத் துறையினருக்குப் புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா். விசாரணையில் அந்த நிறுவனம், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான சில ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.