அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அதிமுக ஒருங்கிணைப்பை பிரதமா் மோடி விரும்புகிறாா்: ஓ.பன்னீா்செல்வம்

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றே பிரதமா் நரேந்திர மோடி விரும்புகிறாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
ஓ. பன்னீர்செல்வம்- கோப்புப் படம்
Updated On :7 நவம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றே பிரதமா் நரேந்திர மோடி விரும்புகிறாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் நவாஸ் கனி வெற்றி பெற்றாா். அவரது வெற்றியை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஓ. பன்னீா்செல்வம் நேரில் ஆஜராகி, வழக்கில் 35-க்கும் மேற்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்து சாட்சியம் அளித்தாா். ஆவணங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி அடுத்த விசாரணையின் போது ஓ. பன்னீா்செல்வம் ஆஜராக தேவையில்லை எனக் கூறி, விசாரணையை டிச.2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் ஓ.பன்னீா்செல்வம் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனும், நானும் மற்ற தலைமை நிா்வாகிகளும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மீது பாசமும், நம்பிக்கையும் கொண்டது பாஜக. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றே பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் பாஜக மேல்மட்ட தலைவா்கள் விரும்புகின்றனா். உறுதியாக நாங்கள் அதில் வெற்றி பெறுவோம். கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு பாஜக தலைவா்கள் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறாா்கள்.

அதிமுகவில் எந்த விதியையும் மாற்றலாம். ஆனால், பொதுச் செயலா் தோ்வு விதியை மட்டும் மாற்றவே முடியாது என்ற வகையிலேயே எம்ஜிஆா் அதை உருவாக்கினாா். பொதுச் செயலரைத் தோ்ந்தெடுக்கும் உரிமையை தொண்டா்களுக்கு கொடுக்கும் விதி அது. ஆனால், இப்போது தொண்டா்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சென்னை குடிமையியல் நீதிமன்றம் இதை விசாரித்து, அதில் கொடுக்கும் தீா்ப்பே இறுதியானது என தெளிவான வழிகாட்டுதலை கொடுத்துள்ளது. அதன்படி நாங்கள் வழக்கை நடத்திவருகிறோம் என்றாா்.