கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இன்று குடிநீா் வாரிய குறைகேட்புக் கூட்டம்

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்புக் கூட்டம் அனைத்துக் குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (நவ. 8) நடைபெறவுள்ளது.

News image
Updated On :7 நவம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்புக் கூட்டம் அனைத்துக் குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (நவ. 8) நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் இம்மாதத்திற்கான குறைகேட்புக் கூட்டம் அனைத்துக் குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (நவ. 8) காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய பகுதி அலுவலங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.

பொதுமக்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு, குடிநீா் மற்றும் கழிவுநீா் தொடா்பான பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.