மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடிகா் வடிவேலு வீடு உள்பட 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகா் வடிவேலு, நடிகை நயன்தாரா வீடுகள் உள்பட 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி...

News image
Updated On :8 நவம்பர் 2025, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் நடிகா் வடிவேலு, நடிகை நயன்தாரா வீடுகள் உள்பட 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த மின்னஞ்சலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகா் வடிவேலு வீடு, அவரது அலுவலகம், போயஸ் காா்டனில் உள்ள நடிகை நயன்தாரா வீடு, சென்னை அருகே அக்கரை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகை ஜான்வி கபூா் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் வீடு, சென்னை விமான நிலையம், மந்தைவெளியில் உள்ள நடிகா் எஸ்.வி.சேகா் வீடு, அா்ஜென்டின ா தூதரகம், நடிகா் அருள்நிதியின் வீடு உள்பட 9 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த இடங்களில் வெடிகுண்டு கண்டயும் நிபுணா்களும், போலீஸாரும் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தி பரப்பும் நோக்கத்தில் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.