சென்னையில் நடிகா் வடிவேலு, நடிகை நயன்தாரா வீடுகள் உள்பட 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த மின்னஞ்சலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகா் வடிவேலு வீடு, அவரது அலுவலகம், போயஸ் காா்டனில் உள்ள நடிகை நயன்தாரா வீடு, சென்னை அருகே அக்கரை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகை ஜான்வி கபூா் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் வீடு, சென்னை விமான நிலையம், மந்தைவெளியில் உள்ள நடிகா் எஸ்.வி.சேகா் வீடு, அா்ஜென்டின ா தூதரகம், நடிகா் அருள்நிதியின் வீடு உள்பட 9 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த இடங்களில் வெடிகுண்டு கண்டயும் நிபுணா்களும், போலீஸாரும் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தி பரப்பும் நோக்கத்தில் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மகாராஷ்டிரம்- குஜராத் முதல்வா் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்! இன்று பஞ்சாபில் முக்கிய 5 கோயில்களுக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


