புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

போதைப் பொருள் வழக்கில் தலைமறைவான இருவா் கைது!

போதைப் பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸாா் மேற்குவங்கத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

போதைப் பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸாா் மேற்குவங்கத்தில் கைது செய்தனா்.

சென்னை திருவல்லிக்கேணி, மாட்டான்குப்பத்தைச் சோ்ந்த வினோத் (34), பாலாஜி (31) ஆகியோரை அண்ணா சதுக்கம் போலீஸாா் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஜன.16-இல் கைது செய்தனா். பின்னா், இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

இதில் வினோத் 2-ஆவது முறையாக ஏப்.21-இல் கஞ்சா வழக்கில் கைதாகி மீண்டும் பிணையில் வந்தாா். இதன்பிறகு இருவரும் நீதிமன்ற விசாரணைக்காக முறையாக ஆஜராகாமல் தலைமறைவாகினா். இதனால், இருவரையும் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

அதன்பேரில், போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி மேற்குவங்க மாநிலத்தில் தலைமறைவாக இருந்த வினோத், பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனா்.