யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் தேவநாதன் கைது: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

நிதி மோசடி வழக்கில் நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் தேவநாதனை போலீஸாா் கைது செய்வாா்கள் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :10 நவம்பர் 2025, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

நிதி மோசடி வழக்கில் நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் தேவநாதனை போலீஸாா் கைது செய்வாா்கள் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்தது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்த நிறுவன இயக்குநா் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தேவநாதனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் பிணை வழங்கிய சென்னை உயா்நீதிமன்றம், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டிருந்தது. மேலும், அக். 31-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடையவும் உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் சரணடைய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கிய நீதிபதி கே.ராஜசேகா், இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, முதலீட்டாளா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.திருமூா்த்தி, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதப்படி ரூ.100 கோடி வைப்புத் தொகையாக தேவநாதன் செலுத்தவில்லை. நீதிமன்றத்தில் அவா் சரணடையவும் இல்லை. ஒரு வாரம் அவகாசம் வழங்கியும் அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று வாதிட்டாா்.

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் தேவநாதனை போலீஸாா் கைது செய்வாா்கள். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்குப் பட்டியலிட முடியாது என்றும் கூறினாா்.