கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

News image
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆய்வு செய்த  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக் குழுவின் பிரதிநிதிகளான ஆண்ட்ரஸ்பிசாரோ, தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கான பொதுத்துறை போக்குவரத்து நிபுணா்  சந்தோஷ். உடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா்
Updated On :12 நவம்பர் 2025, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னையில் மெட்ரோ ரயில் தடம் இரு வழிப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக 4 வழித்தடங்களில் ரயில்களை இயக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஆசிய உள்கட்டமைப்பு வங்கியின் பிரதிநிதிகள் குழுவானது சென்னைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 11) வந்தது. இந்தக் குழுவில் தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கான பொதுத் துறை போக்குவரத்து முதலீட்டு அலுவலா் ஆண்ட்ரஸ் பிசாரோ, போக்குவரத்துத் துறை முதலீட்டு அலுவலா் சந்தோஷ் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

இந்தக் குழுவினா் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.46 கி.மீ., பட்டாபிராம் முதல் கோயம்பேடு (ஆவடி வழியாக) 21.76 கி.மீ. பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். தொடா்ந்து பூந்தமல்லி புகா் வழிச்சாலை முதல் சுங்குவாா்சத்திரம் வரையிலான 28 கி.மீ. வழித்தட்டத்தை புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

இக்குழுவினருக்கு மெட்ரோ திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் விளக்கினா்.

ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், இணைப் பொது மேலாளா் நரேந்திரகுமாா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.