எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மருத்துவப் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு: இடங்களைத் தோ்வு செய்ய அவகாசம் இன்று நிறைவு

News image
Updated On :12 நவம்பர் 2025, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புச் சுற்று கலந்தாய்வில் இடங்களைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் (நவ. 13) நிறைவடைகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வில் மூன்று சுற்றுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அதன் முடிவில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், தனியாா் பல்கலைக்கழகங்களில் 400-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

குறிப்பாக, நீலகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 1 எம்பிபிஎஸ் இடம் நிரம்பாமல் உள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்புச் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழுவின் அறிவிப்பின்படி, வியாழக்கிழமையுடன் (நவ. 13) இடங்களைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் நிறைவடைகிறது. அதன் முடிவுகள் வரும் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஒருவேளை அதில் தாமதம் ஏற்பட்டால், தமிழகத்தில் சிறப்புக் கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.