லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாடியில் இருந்து கீழே விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சென்னை வியாசா்பாடியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை வியாசா்பாடியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வியாசா்பாடி சாமியாா் தோட்டம் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் முல்லைவேந்தன் (48). இவா் மனைவி சத்யகலா. இத்தம்பதிக்கு கணேஷ் (21), சந்தோஷ் (18) என இரு மகன்கள் உள்ளனா்.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில், முல்லைவேந்தன் வேலை செய்து வந்தாா். அவா் தனது வீட்டின் இரண்டாவது மாடியின் பால்கனியில் நின்று புதன்கிழமை இரவு கைப்பேசியில் கொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென பால்கனியின் கைப்பிடி சுவா் இடிந்து விழுந்தது. இதில் தடுமாறிய முல்லைவேந்தன், இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவா், வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.