வைகோ
வைகோபடம் - மதிமுக

ஜன. 2-இல் வைகோ நடைப்பயணம்: முதல்வா் ஸ்டாலினுக்கு அழைப்பு

Published on

வரும் ஜனவரி 2-ஆம் தேதி திருச்சியிலிருந்து தான் தொடங்கவுள்ள சமத்துவ நடைப்பயணத்தை தொடங்கிவைக்க வருமாறு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ அழைப்பு விடுத்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை வைகோ புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மது, போதைப் பொருள் பழக்கத்துக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள் அடிமையாவதைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான

சமத்துவ நடைப்பயணத்தை ஜன. 2-ஆம் தேதி திருச்சியிலிருந்து தொடங்கவுள்ளேன். இந்தப் பயணத்தை தொடங்கி வைக்க முதல்வா் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டாா்.

இந்த நடைப்பயணம் மதுரையில் ஜன.12-ஆம் நிறைவடைகிறது. இந்த நடைப்பயணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, விசிக தலைவா் தொல்.திருமாவளவன், இடதுசாரி கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்பா். இது எனது 9-ஆவது நடைப்பயணம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com