திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நாய்களுக்கு உணவளிப்பதில் ஆர்வலர்கள், பொதுமக்கள் மோதல்! அம்பத்தூரில் பரபரப்பு!

அம்பத்தூர் பகுதியில் நாய்களுக்கு உணவு அளிப்பதில் விலங்கு ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

News image

தெரு நாய்களுக்கு உணவு... - கோப்பிலிருந்து...

Updated On :17 நவம்பர் 2025, 4:11 am IST

அம்பத்தூர் பகுதியில் நாய்களுக்கு உணவு அளிப்பதில் விலங்கு ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

அம்பத்தூர் விஜிஎன் நகரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற பெண்ணை நாய் ஒன்று துரத்திக் கடித்தது. இந்த நிலையில், அப்பகுதியில், வசித்து வரும் ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் டிஐஜியான கிருஷ்ணமூர்த்தி (63) தெரு நாய்களுக்கு தினமும் உணவளிப்பதாகவும், இதனால் அப்பகுதியில் அதிகப்படியான தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும் அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தெரு நாய்களை அப்பகுதிவாசிகள் கொடுமைப்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் கள அலுவலர் பால் ஆபிரகாம் (25) என்பவர் சனிக்கிழமை அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த குடியிருப்போர் அங்கு சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அப்போது பால் ஆபிரகாமுக்கும், குடியிருப்போர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில், அப்பகுதிவாசிகள் தாக்கியதில், பால் ஆபிரகாம் முகத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, பால் ஆபிரகாம் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இதனிடையே, சென்னை பல்வேறு பகுதிகளில் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை அம்பத்தூர் விஜிஎன் நகருக்கு வந்தனர். அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளை அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு வழங்கினர். இதைப்பார்த்த குடியிருப்போர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விலங்குகள் நல பெண் ஆர்வலர் ஒருவர் கீழே விழுந்து கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார், இருதரப்பையும் சமரசம் செய்ய முயன்றனர். இருதரப்பினரும் மாறி, மாறி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.