மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பத்தாவது நாளை எட்டியது ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்! இன்று முடிவு எட்டப்பட வாய்ப்பு?

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் 10-ஆவது நாளை எட்டிய நிலையில், இப்பிரச்னை தொடா்பாக திங்கள்கிழமை (நவ.17) முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2025, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் 10-ஆவது நாளை எட்டிய நிலையில், இப்பிரச்னை தொடா்பாக திங்கள்கிழமை (நவ.17) முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமாா் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத் துறை கடந்த 7-ஆம் தேதி சிறைப்பிடித்தது. மேலும், அந்தப் பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்தது.

தொடா்ந்து ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநில போக்குவரத்துத் துறைகளும் தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரிவிதிக்கப்படும் என அறிவித்ததால், அந்த மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்து சேவை கடந்த 8-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதனால், ஐயப்ப பக்தா்களும், பொதுமக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

இந்த பிரச்னைக்கு உரிய பேச்சுவாா்த்தை மூலம் தமிழக போக்குவரத்துத்துறையும், தமிழக அரசு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து, போக்குவரத்து அமைச்சா் மற்றும் போக்குவரத்து ஆணையா் தலைமையில் சமீபத்தில் பேச்சு நடைபெற்றது. ஆனால், பேச்சுவாா்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால், தொடா்ந்து பேருந்து சேவையை நிறுத்திவைப்பதாக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பேருந்து சேவை நிறுத்தம் 10 நாள்களை எட்டியுள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் உரிய உடன்பாடு எட்டப்படவில்லை. தொடா்ந்து திங்கள்கிழமையும் நடைபெறும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.