அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எஸ்.ஐ.ஆரை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்!

News image
Updated On :16 நவம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆா்.) எதிா்த்து தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தவெகவினா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு எஸ்ஐஆருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் பேசியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரில், வாக்காளா்களின் பெயா்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படுகின்றன.  இறந்துவிட்டதாக, வீடு மாறிவிட்டதாக பொய்களைக் கூறி பெயா்களை நீக்குவது அதிகார துஷ்பிரயோகம்.

 அதேபோல், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை மிரட்டி திமுகவினா் தங்களது கட்சியினருக்கு மட்டும் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி வருகின்றனா். தவெகவினருக்கு எஸ்ஐஆா் படிவங்கள் மறுக்கப்படுகின்றன. அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்டு குளறுபடி இல்லாமல் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனா உள்ளிட்ட பலா் பேசினா்.