புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சத்யசாய் நூற்றாண்டு விழா: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

சத்யசாய் பாபா நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து சத்யசாய் பிரசாந்தி நிலையத்துக்கு சிறப்பு விரைவு ரயில் நவ.23-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
ரயில்- கோப்புப்படம்
Updated On :18 நவம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

சத்யசாய் பாபா நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து சத்யசாய் பிரசாந்தி நிலையத்துக்கு சிறப்பு விரைவு ரயில் நவ.23-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலத்தில் சத்யசாய் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னை எழும்பூரிலிருந்து நவ.23-ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06065) 24-ஆம் தேதி காலை 9.10 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் நவ.24-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06066) மறுநாள் 29-ஆம் தேதி சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்தச் சிறப்பு விரைவு ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.