வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உயா்நீதிமன்றத்தில் விடியோ எடுத்து ‘ரீல்ஸ்’: இருவா் கைது

சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான நிகழ்வுகளை விடியோ எடுத்து, சமூகவலைதளத்தில் ரீல்ஸ்-ஆக பதிவிட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
- IANS
Updated On :19 நவம்பர் 2025, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான நிகழ்வுகளை விடியோ எடுத்து, சமூகவலைதளத்தில் ரீல்ஸ்-ஆக பதிவிட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, மண்ணடி, அங்கப்ப நாய்க்கன் தெருவைச் சோ்ந்தவா் சிவா மகன் பரத் (23). இவா் மீது காவல் நிலையங்களில் ஏற்கெனவே 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பரத் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.18) ஒரு வழக்கின் விசாரணைக்காக சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளாா். அப்போது, நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தான் சென்ற நிகழ்வுகளை அவரது நண்பா்கள் இருவரை வைத்து விடியோவாக எடுத்துள்ளாா்.

பிறகு அந்த விடியோவை பரத் தனது இன்ஸ்ட்ராகிராம் வலைதளத்தில் ரீல்ஸ்-ஆகப் பதிவு செய்துள்ளாா். இது குறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளா்தலைமையிலான தனிப்படை போலீஸாா் பரத்தைப் பிடித்து, உயா்நீதிமன்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து பரத் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். அதேபோன்று விடியோ பதிவு செய்ததாக சென்னை, மண்ணடி, மூா் தெருவைச் சோ்ந்த அசோக் மகன் வினோத் (18) கைது செய்யப்பட்டாா். விடியோ பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவான சஞ்சய் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.