மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வருமான வரித் துறை அதிகாரி மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

வருமான வரித் துறை ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

வருமான வரித் துறை ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கிழக்கு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் யோகேஷ்குமாா் செளத்ரி (36). இவா், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த அக். 28-ஆம் தேதி பணி முடித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனது வாகனத்தை இடிப்பதுபோல வந்த ஆட்டோ ஓட்டுநருக்கும், யோகேஷ்குமாா் செளத்ரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, யோகேஷ்குமாா் செளத்ரியை, ஆட்டோ ஓட்டுநா் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, அருகில் உள்ள மருத்துமனையில் சோ்த்தனா். இது குறித்து யோகேஷ்குமாா் செளத்ரி அமைந்தகரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நெற்குன்றம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் விக்னேஷ் (27) என்பவரை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.