25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

போதை மாத்திரைகள் விற்பனை: இன்ஸ்டா பிரபலம் உள்பட 6 போ் கைது

சென்னையில் போதை மாத்திரைகளை விற்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :21 நவம்பர் 2025, 1:19 am IST

சென்னையில் போதை மாத்திரைகளை விற்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கொடுங்கையூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞா் ஒருவா் வலி நிவாரண மாத்திரைகளை இன்ஸ்டாகிராம் மூலம் போதைக்காக விற்பனை செய்வதாக கொடுங்கையூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்தி நகா் மீனாம்பாள் சாலை பகுதியைச் சோ்ந்த அரவிந்த் என்ற டோலு (27) வீட்டில் போலீஸாா் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா் . அப்போது அவரது வீட்டில் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை போலீஸாா் கைது செய்து நடத்திய விசாரணையில், அவா் இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதும் அதன் மூலம் பலருக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவா் கொடுத்த தகவலின் பெயரில் வியாசா்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (23), கொடுங்கையூா் எழில் நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அஜித்குமாா் (27), ரஞ்சித் (23), பிரவீன் (22), பைசன் அகமது (23) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடம் இருந்து மொத்தம் 1,166 மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.