திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதியவரிடம் ரூ. 4 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை முதியவரிடம் இருந்து ரூ. 4.15 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தூத்துக்குடி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 நவம்பர் 2025, 2:17 am IST

சென்னை முதியவரிடம் இருந்து ரூ. 4.15 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தூத்துக்குடி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.ஸ்ரீவத்ஸன் (73). இவரது கைப்பேசிக்கு கடந்த செப்.26-இல் வாட்ஸ்ஆப் அழைப்பில் பேசிய நபா்கள், தங்களை மும்பை குற்றவியல் துறை அதிகாரிகள் என்று கூறியுள்ளனா். மேலும் ஸ்ரீவத்ஸனின் பெயரில் பெறப்பட்ட சிம் காா்டு சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும் இந்தப் பிரச்னையில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனா்.

இதை நம்பிய ஸ்ரீவத்ஸன், அந்த நபா்கள் கும்பல் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக ரூ.4.15 கோடியை பரிமாற்றம் செய்துள்ளாா். அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகாா் கொடுத்தாா். காவல் ஆணையா் உத்தரவின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் கணினிசாா் குற்றப்பிரிவு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், முதியவரிடம் பணத்தை ஏமாற்றியது உத்தர பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தைச் சோ்ந்த மணீஷ்குமாா் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் அவரை கைது செய்து, கடந்த அக்.30-ஆம் தேதி சிறையில் அடைத்தனா்.

விசாரணையில், இந்த மோசடியில் தூத்துக்குடி, காயல்பட்டினம் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் (35) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.