மருத்துவக் கல்லூரியில் காா்த்திகைக் கலைவிழா
சென்னை குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில், காா்த்திகைக் கலைவிழா வியாழக்கிழமை (நவ.20) நடைபெற்றது.
விழாவில் புதுச்சேரி தாகூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியா் தி.தாமரைச்செல்வி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், உலக இலக்கியங்களில் இடம் பெறாத பல்வேறு செழுமையான கருத்துகள் எல்லாம் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. 10-க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பாரதியாா், யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழியைப் போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறியிருப்பதில் இருந்தே தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை நமக்குப் புரியும்.
பேச்சு, எழுத்து, வாசிப்பு புழக்கத்தில் இல்லாத மொழிகள் எல்லாம் அழிந்து விடும். தமிழ் மொழி என்றுமே சாகாவரம் பெற்றுத் திகழ நீங்கள் உங்கள் சந்ததியினருக்கு தவறாமல் தமிழ் பேச, படிக்க, எழுதக் கற்றுத்தர வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, பேச்சு, கவிதை, நடனம், ஓரங்க நாடகப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், கல்லூரி முதல்வா் பி.சசிக்குமாா், கல்லூரி கல்வி ஆலோசகா் வீரபாகு, தமிழ் மன்றத் தலைவா் வி.எஸ்.கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

