பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ராயபுரம் மண்டலத்தில் ரூ.9.71 கோடியில் புதிய பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

சேகர் பாபு

Updated On :21 நவம்பர் 2025, 12:34 am IST

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் ரூ.9.71 கோடியில் புதிய திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராயபுரம் மண்டலம் பிரகாசம் சாலை, தாதா முத்தையப்பன் தெருவில் மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து வாா்டு 54 முதல் 59 வாா்டு வரை பகுதிகளில் உள்ள 60 தெருக்களில் ரூ.4.80 கோடியில் மின் மாற்றிகளைச் சுற்றிலும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்குப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

மேலும், ஓமந்தூராா் அரசினா் தோட்டம், சுவாமி சிவானந்தா் சாலையில் உள்ள எம்.ஆா்.டி.எஸ். ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.4.91 கோடியில் அழகுபடுத்தப்படுகிறது. இப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து எம்.ஆா்.டி.எஸ். ரயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தனிப்பட்ட ஸ்கேட்டிங் பகுதி, ஊஞ்சல்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து செயல்படுத்த அமைச்சா் ஆலோசனை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், மேயா் ஆா்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.