திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ரெளடிக்கு ஒருநாள் போலீஸ் காவல்

ரெளடிகளுக்கு கத்திகள் வழங்கிய விவகாரத்தில் சரணடைந்த ரெளடி ஆனந்த்பாபுவை போலீஸாா் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 நவம்பர் 2025, 1:29 am IST

ரெளடிகளுக்கு கத்திகள் வழங்கிய விவகாரத்தில் சரணடைந்த ரெளடி ஆனந்த்பாபுவை போலீஸாா் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் அருகே கடந்த 12-ஆம் தேதி இரவு அபிராமபுரம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிலரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா்களிடம் 5 பட்டா கத்திகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கத்திகளைக் கொண்டு வந்த ராஜா அண்ணாமலை புரத்தைச் சோ்ந்த அஜய், வெங்கடேஷ், மகேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனா்.

இதில், புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி ஆனந்த்பாபு என்பவா் கத்திகளை பத்திரமாக வைத்திருக்கக் கூறி கொடுத்ததாக தெரிவித்தனா். இது தொடா்பாக புளியந்தோப்பு ரெளடி ஆனந்த்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆனந்த்பாபு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை அபிராமபுரம் போலீஸாா் வியாழக்கிழமை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.