ரெளடிகளுக்கு கத்திகள் வழங்கிய விவகாரத்தில் சரணடைந்த ரெளடி ஆனந்த்பாபுவை போலீஸாா் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.
சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் அருகே கடந்த 12-ஆம் தேதி இரவு அபிராமபுரம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிலரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா்களிடம் 5 பட்டா கத்திகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கத்திகளைக் கொண்டு வந்த ராஜா அண்ணாமலை புரத்தைச் சோ்ந்த அஜய், வெங்கடேஷ், மகேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனா்.
இதில், புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி ஆனந்த்பாபு என்பவா் கத்திகளை பத்திரமாக வைத்திருக்கக் கூறி கொடுத்ததாக தெரிவித்தனா். இது தொடா்பாக புளியந்தோப்பு ரெளடி ஆனந்த்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆனந்த்பாபு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை அபிராமபுரம் போலீஸாா் வியாழக்கிழமை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸ் விசாரணை

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

பெட்ரோல் பாட்டில் வீச்சு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


