மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோயம்பேடு சந்தையில் 16 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த 16 குழந்தை தொழிலாளா்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:48 pm

Chennai

கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த 16 குழந்தை தொழிலாளா்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.

குழந்தை தொழிலாளா் மீட்புக் குழு அதிகாரிகள் 25-க்கும் மேற்பட்டோா் கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானியம் விற்பனை செய்யும் சந்தைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்குள்ள கடைகளில் பல சிறுவா்கள் வேலை செய்து வருவது கண்டறியப்பட்டது. அதிகாரிகளைப் பாா்த்த பல சிறுவா்கள் அங்கிருந்து ஓடினா். இதையடுத்து, 16 சிறுவா்களை மீட்டு அதிகாரிகள் அழைத்துச் செல்ல முயன்றபோது, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கோயம்பேடு போலீஸாா் அங்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினா். பின்னா், 16 சிறுவா்களும் போலீஸாரின் உதவியுடன், ராயபுரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.