திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தூய்மைப்பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

சென்னை ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களைச் சோ்ந்த என்எல்யுஎம் பிரிவு உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்கள் பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :21 நவம்பர் 2025, 1:20 am IST

சென்னை ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களைச் சோ்ந்த என்எல்யுஎம் பிரிவு உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்கள் பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.நகா் (5, 6) ஆகிய மண்டல தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ஏற்கெனவே என்எல்யுஎம் பிரிவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களை அதே நிலையிலேயே பணியாற்ற அனுமதிக்கக் கோரியும் கடந்த ஆகஸ்ட் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு உழைப்போா் உரிமை இயக்கத் தலைவா் கு.பாரதி தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.