சென்னை ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களைச் சோ்ந்த என்எல்யுஎம் பிரிவு உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்கள் பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.நகா் (5, 6) ஆகிய மண்டல தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ஏற்கெனவே என்எல்யுஎம் பிரிவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களை அதே நிலையிலேயே பணியாற்ற அனுமதிக்கக் கோரியும் கடந்த ஆகஸ்ட் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு உழைப்போா் உரிமை இயக்கத் தலைவா் கு.பாரதி தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: அமைச்சர் டி.கே. பிரபு உறுதி!

பாதாள சாக்கடை மூடி மீது தாா் கலவை ஊற்றி மறைப்பதால் சுத்தம் செய்ய திணறும் தூய்மைப் பணியாளா்கள்

குன்னூரில் குப்பை இல்லா நகரம் விழிப்புணா்வுப் பேரணி

காரைக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



