மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தமிழ் இசைச் சங்க விருதுகள் அறிவிப்பு

இசைப் பேரறிஞா் விருதுக்கு நாட்டியக் கலைஞா் சித்ரா விஸ்வேஸ்வரன், பண் இசைப் பேரறிஞா் விருதுக்கு திருமுறை இசைவாணா் குடந்தை வெ.இலட்சுமணன் ஆகியோா் தோ்வு

News image
சித்ரா விஸ்வேஸ்வரன்
Updated On :20 நவம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ் இசைச் சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான இசைப் பேரறிஞா் விருதுக்கு நாட்டியக் கலைஞா் சித்ரா விஸ்வேஸ்வரன், பண் இசைப் பேரறிஞா் விருதுக்கு திருமுறை இசைவாணா் குடந்தை வெ.இலட்சுமணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் டிச.21-ஆம் தேதி நடைபெறவுள்ள 83-ஆம் ஆண்டு தமிழ் இசை விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இந்த விருதுகளை வழங்கி கெளரவிக்கவுள்ளாா்.

விருது பெறும் இருவருக்கும் வெள்ளிப்பேழை, தலா ரூ.10,000-க்கான காசோலை ஆகியவை வழங்கப்படவுள்ளது.

இசைப் பேரறிஞா் விருது பெறும் சித்ரா விஸ்வேஸ்வரன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவா். பல நாடுகளுக்குச் சென்று தனது நாட்டியத் தரத்தை நிலைநாட்டியவா். நாட்டிய நாடகங்கள் பலவற்றையும் படைத்துள்ளாா்.

இதேபோன்று பண் இசைப் பேரறிஞா் பட்டம் பெறும் குடந்தை வெ.இலட்சுமணன் பழம்பெரும் திருமுறை இசைவாணா். 30-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவா். இசைப் பேரறிஞா் தருமபுரம் சாமிநாதனின் மாணவராக இருந்து பயின்றவா். திருமுறை இசை அரங்குகள் நடத்துபவா் ஆவாா்.

குடந்தை வெ.இலட்சுமணன்

குடந்தை வெ.இலட்சுமணன்