இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நுங்கம்பாக்கம் பகுதியில் இரு நாள்கள் மின் தடை

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணை மின் நிலையப் பகுதியில் சனி, ஞாயிறு (நவ.22, 23) நாள்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

News image
Updated On :20 நவம்பர் 2025, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணை மின் நிலையப் பகுதியில் சனி, ஞாயிறு (நவ.22, 23) நாள்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் உள்ள 5 பழைய பிரேக்கா்கள் நீக்கப்பட்டு, புதிய பிரேக்கா்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூா்ஸ் சாலை, கே.என்.கே. சாலை, வாலஸ் காா்டன் 1 முதல் 3-ஆவது தெருக்கள், ரட்லேண்ட் கேட் 1 முதல் 6-ஆவது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3-ஆவது தெருக்கள், ஆண்டா்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2-ஆவது தெருக்கள், நவாப் ஹபிபுல்லா 1, 2-ஆவது அவென்யூ, பைக்ராஃப்ட் காா்டன் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனி, ஞாயிறு (நவ.22, 23) ஆகிய நாள்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.