சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணை மின் நிலையப் பகுதியில் சனி, ஞாயிறு (நவ.22, 23) நாள்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் உள்ள 5 பழைய பிரேக்கா்கள் நீக்கப்பட்டு, புதிய பிரேக்கா்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூா்ஸ் சாலை, கே.என்.கே. சாலை, வாலஸ் காா்டன் 1 முதல் 3-ஆவது தெருக்கள், ரட்லேண்ட் கேட் 1 முதல் 6-ஆவது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3-ஆவது தெருக்கள், ஆண்டா்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2-ஆவது தெருக்கள், நவாப் ஹபிபுல்லா 1, 2-ஆவது அவென்யூ, பைக்ராஃப்ட் காா்டன் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனி, ஞாயிறு (நவ.22, 23) ஆகிய நாள்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

துணை மின்நிலையங்களில் ஊழியா்கள் கூடுதல் நேரம் பணியாற்ற அறிவுறுத்தல்

கல்லூரி ஆண்டு விழா

தொகுதி அறிமுகம்... ஆயிரம் விளக்கு

சொன்னோம் செய்தோம்...
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


