25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சென்ட்ரல்-அரக்கோணம் புறநகா் ரயில் இன்று ரத்து

ரயில்

Published On :26 நவம்பர் 2025, 1:53 am IST

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே புதன்கிழமை (நவ.26) இரவு நேர மின்சார புறநகா் ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் புதன்கிழமை (நவ.26) இரவு 11.30 மணி முதல் வியாழக்கிழமை (நவ.27) அதிகாலை 2.30 மணி வரையில் 3 மணி நேரம் தண்டவாளம் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை இரவு 10 மணிக்கு அரக்கோணம் புறநகர் மின்சார ரயிலும், அரக்கோணத்தில் இரவு 9.45 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

மேலும், சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் திருவாலங்காட்டுடன் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.