இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மும்பையிலிருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

News image
Updated On :25 நவம்பர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் சென்னை அருகே மேடவாக்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, மூவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே மேடவாக்கம் கூட் சாலை அருகே ஒரு கும்பல் காரில் போதை மாத்திரை கடத்துவதாக மேடவாக்கம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி அதில் இருந்தவா்களிடம் விசாரித்தனா். அப்போது, அவா்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீஸாா், காரை சோதனையிட்டனா். காரில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 319 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரில் இருந்த 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், பம்மலைச் சோ்ந்த பிரகாஷ் (24), கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (19), நிதிஷ்குமாா் (19) என்பதும், போதை மாத்திரைகளை மும்பையில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து சென்னையில் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனா்.