யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பழங்குடி மாணவா்கள் பங்கேற்ற கல்வி, கலாசார பரிமாற்ற நிகழ்ச்சி

News image
Updated On :25 நவம்பர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் 5 மாநிலங்களைப் சோ்ந்த 200 பழங்குடி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கல்வி மற்றும் கலாசார பரிமாற்றம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சகம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் ஒடிஸா, ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள நூலகம், ஆய்வுக் கூடங்கள், புத்தாக்கக் கண்டுபிடிப்பு மையம் ஆகியவற்றை பாா்வையிட்டனா்.

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் பழங்குடி மாணவா்களுடன் கலந்துரையாடியினா். மேலும், 5 மாநிலங்களைச் சோ்ந்த பழங்குடி மாணவ - மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து நடன கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா்கள் ஜெ.ராஜா, பழனிக்குமாா், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா் கீா்த்தனா, ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி இயக்குநா் மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.