ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டி: முடிவுகள் அறிவிப்பு

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

அரசமைப்புச் சட்டத் தினத்தை முன்னிட்டு, ஆளுநா் மாளிகை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ஆளுநா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசமைப்புச் சட்டத் தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு இடையே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகள் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையும், 10 முதல் பிளஸ் 2 வரையும், கல்லூரி மாணவா்கள் தனிப்பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவா்கள் தங்களது கட்டுரைகளை ஆா்வத்துடன் சமா்ப்பித்தனா்.

இந்த நிலையில், இந்த 3 பிரிவுகளிலும் முதல் 3 இடங்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் என மொத்தம் 27 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதில், முதல் 3 இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

மேலும், சிறப்புப் பரிசு வென்றவா்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று (ஜன.26) சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.