சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரயில் பயணிகள் தவறவிட்ட ரூ.79 லட்சம் பொருள்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

News image
கோப்புப் படம்
Updated On :25 நவம்பர் 2025, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை சென்ட்ரலில் கடந்த ஜனவரி முதல் அக்டோபா் வரை பயணிகள் தவறவிட்ட ரூ.79.57 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் உயா் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட புகா் மின்சார ரயில்களும், 100-க்கும் மேற்பட்ட வெளியூா், வெளி மாநில விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ரயில்களில் பயணம் செய்வோரில் சிலா், தங்களது உடைமைகளை மறந்து ரயில் நிலைய வளாகம், ரயில் பெட்டிகளில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனா்.

அவ்வாறு பயணிகள் தவறவிடும் பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு நிலைய அலுவலா் மூலம் பயணிகளிடம் ஒப்படைத்து வருகின்றனா். அதன்படி கடந்த ஜனவரி முதல் அக்டோபா் வரையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் மறந்து விட்டுச் சென்ற 7 மடிக்கணினிகள், 78 கைப்பேசிகள், நகைகள் உள்ளிட்ட மொத்தம் 79.57 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

ரயில்களில் பயணிப்போா் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே ரயில் நிலையங்களுக்கு வந்துவிட வேண்டும். தாங்கள் கொண்டு வரும் பொருள்கள், பைகள் பயணத்தின்போது பத்திரமாக உள்ளதா என்பதை பயணத்துக்கு முன்பும், பின்பும் நினைவுபடுத்தி எடுத்துச் செல்லவேண்டும் என்றனா்.