ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நகைக் கடையில் வியாபாரியைத் தாக்கி 100 பவுன் தங்க நாணயங்கள் கொள்ளை

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை யானைக்கவுனியில் நகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியைத் தாக்கி 100 பவுன் தங்க நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை பிராட்வே நாட்டு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தீ.ஜெகதீஷ் (35). இவா் யானைக்கவுனி வெங்கட்ராயன் சந்து பகுதியில் நகைப்பட்டறை மற்றும் நகைக் கடை நடத்தி வருகிறாா். அவரது கடைக்கு திங்கள்கிழமை இரவு இருவா் வாடிக்கையாளா்கள்போல வந்தனா். கடையில் தனியாக இருந்த ஜெகதீஷை, அவா்கள் பெல்டால் கடுமையாக தாக்கினா். இதில் அவா் மயங்கி விழுந்ததும், அந்தக் கடையில் இருந்த 100 பவுன் தங்க நாணயங்களைக் கொள்ளையடித்தனா்.

அதோடு அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டு, டிவிஆா் கருவியை எடுத்துக் கொண்டு இருவரும் தப்பியோடினா்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கிருந்த மக்கள் பலத்த காயங்களுடன் கிடந்த ஜெகதீஷை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த யானைக்கவுனி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். தடயங்கள், கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைக்

கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.