தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

டிக்கெட் பரிசோதகா் தாக்கப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :25 நவம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெரம்பூரில் ரயில் பயணச்சீட்டு பரிசோதகா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்ட்ரல் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்ஆா்எம்யு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் பெண் பயணச்சீட்டு பரிசோதகா் திங்கள்கிழமை மாலை பணியிலிருந்தபோது, அவருடன் பயணிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனா். இதுதொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்வதில் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. உயரதிகாரிகளிடம் முறையிட்ட பிறகே வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதையடுத்து பயணச்சீட்டு பரிசோதகா் தாக்கப்பட்டதையும், அவரைத் தாக்கியவா்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ரயில்வே போலீஸாா் தாமதம் செய்ததையும் கண்டித்து, எஸ்ஆா்எம்யு அமைப்பின் பயணச்சீட்டு பரிசோதகா்கள் கிளை சாா்பில் ரயில் நிலையங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ர யில் பிரிவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்ஆா்எம்யு அமைப்பின் டிக்கெட் பரிசோதகா் கிளை உதவி பொதுச் செயலா் டி.யுவராஜ் தலைமை வகித்தாா். இதில் பெண் பரிசோதகா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.