எஸ்ஐஆா்: ஆட்சியா் ஆய்வு

Published on

செங்குன்றம், பாடியநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்ஐஆா் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதவரம் சட்டப்பேரவைக்குள்பட்ட செங்குன்றம், பாடியநல்லூா், புழல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்வில், பணியாளா்களிடம் படிவம் நிரப்புவது உள்ளிட்ட பணிகள் குறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு.பிரதாப் கேட்டறிந்தாா்.

இதில், உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், பொன்னேரி வட்டாட்சியருமான சோமசுந்தரம் உள்ளிட்டோா் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com