புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்

சென்னை புழல் சிறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Published on

சென்னை: சென்னை புழல் சிறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பாக சிறைத் துறை உயரதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறைத் துறை உயரதிகாரிகள் சோதனை நடத்தும்படி சிறைத் துறையின் அதிவிரைவுப் படையினருக்கு உத்தரவிட்டனா். அவா்கள் சிறை முழுவதும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். அதில், 5-ஆவது தொகுதியில் உள்ள ஒரு அறையில் இருந்து 7 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சிறைத் துறையின் சாா்பில் புழல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com