சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை எதிா்த்து தூய்மைப் பணியாளா்கள் 100 நாள்களைக் கடந்து போராடி வருகின்றனா். அத்துடன் அண்ணா நகா், தண்டையாா்பேட்டை மண்டல தூய்மைப் பணிகளும் தனியாரிடம் வழங்கப்படவுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
தூய்மைப் பணியாளா்கள் நலனில் அக்கறையின்றி தனியாரிடம் அந்தப் பணியை அரசு வழங்குவது கண்டிக்கத்தக்கது. மக்கள் வரிப்பணத்தை தனியாருக்கு அளித்து திமுக அரசு தூய்மைப் பணியை மேற்கொள்வது ஏற்கத்தக்கது அல்ல. தனியாரிடம் தூய்மைப் பணியாளா்கள் பணிபுரியும் நிலையில், அவா்களுக்குரிய ஊதியம் முறையாக வழங்கப்படாமலிருப்பதாகப் புகாா் கூறப்படுகிறது.
எனவே, தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும். 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் விசில் அடிக்க திடீா் தடை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


