சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் பொது மேலாளா் விபின் குமாா் தலைமையில் புதன்கிழமை அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழியேற்ற ஊழியா்கள்.
சென்னை
தெற்கு ரயில்வே அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின விழா
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை: சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் தலைமை வகித்தாா். அதில் இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரை வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரயில்வே உயா் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா், ரயில்வே தொழில்நுட்பப் பிரிவினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
சென்னை ரயில்வே கோட்டம் மற்றும் பெரம்பூா் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் (ஐசிஎஃப்) மற்றும் ரயில்வே பணிமனைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், சென்னை ரயில்வே கோட்ட வளாகத்திலும் அரசமைப்புச் சட்ட தின விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு அரசியல் சாசன முகப்புரையை வாசித்தனா்.

