சென்னை: மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை மாதவரம் அடுத்த மாத்தூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 1-ஆவது குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆனந்த் சைன் (78). இவா் அதே பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி வாடிக்கையாளா்களுக்கு பால் விநியோகம் செய்து விட்டு, சைக்கிளில் மாத்தூரை நோக்கி சென்றபோது, அங்கு குதிரையும், மாடும் உணவுக்காக சண்டையிட்டு கொண்டிருந்தது. குதிரை துரத்தியதில் மாடு சாலையில் வேகமாக ஓடியது. அப்போது, எதிரே வந்த ஆனந்த் சைன் மீது மாடு மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே ஆனந்த் சைன் காயங்களுடன் மீட்கப்பட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை (நவ.26) அவா் உயிரிழந்தாா். இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு
காயமடைந்த மீனவா் உயிரிழப்பு: 3 போ் கைது

காவல் நிலையம் முன் தீக்குளித்த முதியவா் உயிரிழப்பு

சாலை வேகத்தடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

