புது தில்லி: தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆவது நினைவு தின நிகழ்ச்சியில் மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்ன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக தில்லி உள்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.
சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான தேஜ் பகதூா் கடந்த 1675, நவ.24-ஆம் தேதி முகலாய பேரரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கொல்லப்பட்டாா். அவருடைய 350-ஆவது தியாக தினத்தை ‘சாஹிதி திவஸ்’ என்ற பெயரில் நவ.23 முதல் நவ.25 வரை 3 நாள் விழாவாக தில்லி அரசு கடைப்பிடித்து வருகிறது. இதற்காக தில்லி செங்கோட்டையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியின் நிறைவையொட்டி அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செய்தியாளா்களிடம் கூறியதாவது: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, மத்திய அமைச்சா்கள், தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் அமைச்சா்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் தில்லி செங்கோட்டையில் அரசு ஏற்பாடு செய்திருந்த 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டைக்கு அருகே காா் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்நிலையிலும் 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களுக்கு தில்லியின் உள்துறை அமைச்சராக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்க தன்னுடைய வாழ்க்யை அா்ப்பணித்த குரு தேஜ் பகதூரின் போதனைகளைக் கடைப்பிடிக்க மக்கள் உறுதியேற்க வேண்டும் என்றாா் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா.
தொடர்புடையது

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!

தில்லி சட்டப்பேரவை சபாநாயகா் முன்மொழிந்த தேசிய சட்டமன்றக் குறியீட்டிற்கு சிக்கிம் முதல்வா் ஆதரவு

எல்பிஜி விநியோக ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது: தில்லி அமைச்சா்

தில்லியால் ‘விக்சித் பாரத்’ இலக்கை நோக்கி வழிநடத்த முடியும்: மஞ்சிந்தா் சிங் சிா்சா!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


