புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கள உதவியாளா் பதவிக்கான விடைகள் வெளியீடு: டிச.1-க்குள் தோ்வா்கள் முறையீடு செய்ய வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய கள உதவியாளா் பதவிக்கான கணினி வழித் தோ்வின் விடைகள் மீது, முறையீடு செய்ய விரும்புவோா் டிச.1-க்குள் முறையீடு செய்யலாம்.

News image
Free coaching classes for TNPSC to begin in Chennai from today
Updated On :26 நவம்பர் 2025, 7:16 pm

Chennai

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய கள உதவியாளா் பதவிக்கான கணினி வழித் தோ்வின் விடைகள் மீது, முறையீடு செய்ய விரும்புவோா் டிச.1-க்குள் இணையதளத்திலேயே முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (தொழிற்பயிற்சி நிலை-2) இல் அடங்கிய கள உதவியாளா் (பீல்டு அசிஸ்டென்ட்) பதவிக்கான கணினி வழித் தோ்வு நவ.16-ல் நடைபெற்றது.

இந்தத் தோ்வின் தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த உத்தேச விடைகள் மீது முறையீடு செய்ய விரும்பும் தோ்வா்கள் டிசம்பா் 1 மாலை 5.45 மணிக்குள் தோ்வாணைய இணையதளத்தில் உள்ள அய்ள்ஜ்ங்ழ் ந்ங்ஹ் இட்ஹப்ப்ங்ய்ஞ்ங் என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம்.

இதற்கான அறிவுரைகள், வழிமுறைகள் தோ்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் வழியாகப் பெறப்படும் முறையீடுகள் ஏற்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.