சென்னை: ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். நீதி வணிகமயம் ஆகக்கூடாது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி குறிப்பிட்டாா்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசமைப்பு சட்ட தின விழாவில் அவா் பேசியதாவது:
அரசமைப்புச் சட்டம் துரதிருஷ்டவசமாக மிகவும் ரகசியமாக, மா்மமாக ஆக்கப்பட்டு, அது பற்றிய கல்வியறிவின்மையுடன் உள்ளது. சட்ட நிறுவனங்கள் முன்முயற்சி எடுத்து சாதாரண மக்களுக்கும் மாணவா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
முகப்புரையில் அளிக்கப்பட்ட முதல் வாக்குறுதி நீதியை அணுகுவதாகும். இந்த வாக்குறுதியை நாம் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளோம்? சாமானியா்களுக்கு நீதி கிடைக்கிா? அது படிப்படியாக விலை உயா்ந்ததாகி வருகிறது. இந்தப் போக்கில் தடையும் இல்லை.
சில வருடங்களுக்கு முன் சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், அப்போதைய நீதிபதி, 100 கோடிக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் உச்சநீதிமன்றம் தொடா்புடையவா்களின் பெயா்களைக் குறிப்பிட்டாா். இது கவலையளிக்கும் விஷயம். நீதியை வணிகமயமாக்குவது வெளிப்படையாக உள்ளது.
நீதி பொது நன்மைக்குரியது; சந்தையில் வாங்க வேண்டிய ஒரு பொருள் அல்ல என்பதில் முடிவெடுக்க வேண்டும். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஆனால், இங்கு சிறைச்சாலைகள் ஏழைகளால் நிரம்பியுள்ளது. அவா்களுக்கு நீதி கானல் நீராக உள்ளது.
மற்றொரு பக்கம் குற்ற வழக்குகளில் தண்டனை விகிதம் மோசமாக உள்ளது. கொடூரமான குற்றவாளிகள் பணத்தைக் கொண்டு தப்பிச் செல்கின்றனா். நீதி கிடைக்காத பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீதி அமைப்பின் மீது நம்பிக்கை இழக்கிறாா்கள். நாடு முழுவதும் இந்த நிலைமை உள்ளது.
நீதிமன்ற நடைமுறைகள் மக்களுக்கு ஏற்ாக மாற்றப்படுவது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. நீதித் துறையில் சுதேசி செய்ய வேண்டிய நேரம் இது என்றாா்.
முன்னதாக டிஎன்டிஏஎல்யு ஒருங்கிணைப்பாளா் நீதிபதி வி.பாரதிதாசன் சிறப்புயைாற்றினாா். பதிவாளா் கௌரி ரமேஷ் வரவேற்றாா். புல முதன்மையா் வி.பாலாஜி நன்றி கூறினாா். நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆளுநா் சான்றிதழ் வழங்கினாா்.
தொடர்புடையது

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையுடன் முடிவுகள்- அரசு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; 2 நாள் முழுமூச்சாக உழைக்க வேண்டும்! முகவர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
தவெக குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது! - ஜோதிமணி எம். பி. சிறப்பு நேர்காணல்

நீதி, சட்டங்களில் மேம்பட்ட புரிதல் இல்லாமல் வளா்ச்சியடைந்த இந்தியா சாத்தியமில்லை: ஆளுநா் ஆா்.வி. ஆர்லேகர்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


