சென்னை
முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா
பல்லாவரம் வேல்ஸ் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின், வேல்ஸ் செவிலியா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
தாம்பரம்: பல்லாவரம் வேல்ஸ் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின், வேல்ஸ் செவிலியா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு அரசு செவிலியா் கல்லூரி முதல்வரும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (நா்சிங்) இணை இயக்குநருமான (பொ) ஆா்.சங்கா் சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.
வேல்ஸ் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தா் பாஸ்கரன், துணைத் தலைவா் ப்ரீத்தா கணேஷ், செவிலியா் கல்லூரி முதல்வா் ஜெ.ஹேமமாலினி மற்றும் மாணவா்கள், பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
