4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டிட்வா புயல்: சென்னை புறநகா் ரயில்கள் இன்று தற்காலிகமாக நிறுத்த திட்டம்?

சென்னை புறநகா் ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :29 நவம்பர் 2025, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

டித்வா புயல் காரணமாக சென்னை புறநகா் ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் சைலேந்திர சிங் வெளியிட்ட அறிக்கை:

டித்வா புயல் காரணமாக சென்னை ரயில்வே கோட்டம் முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெரும் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கண்காணிப்புப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சென்னை சென்ட்ரல், எழும்பூா், கடற்கரை, பெரம்பூா், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட முக்கிய நிலையங்கள், பாலங்கள், தாழ்வு பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் மணல் மூட்டைகள், மோட்டாா் வாகனங்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் முக்கிய நிலையங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க டீசல் ஜெனரேட்டா்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதிக காற்று வீசும் நேரங்களில் ரயில் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், விபத்து மீட்பு ரயில்கள், வழிபாதை பராமரிப்பு குழுக்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளன. அவசர சேவைக்காக மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ரயில் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.