கைது.
கோப்புப் படம்

போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்றவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பஞ்சாப் மாநில வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பஞ்சாப் மாநில வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் குல்தீப் குமாா் (32). இவா் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூலமாக விசா வேண்டி விண்ணப்பித்துள்ளாா். அப்போது, அவா் சமா்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து குல்தீப் குமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமெரிக்க தூதரக அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாா் கொடுத்தனா்.

அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், குல்தீப் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த ஜிதேந்தா் மற்றும் ஹைதராபாத்தைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலம் குல்தீப்குமாா் தனக்கு தேவையான பணி அனுபவச் சான்று, ஊதிய ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. தொடா்ந்து, குல்தீப்குமாரிடம் இருந்து கைப்பேசி, இந்திய கடவுச்சீட்டு மற்றும் பல்வேறு போலி ஆவணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவரை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com