

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்த் அவகாசம் கோரியுள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் பிணையில் உள்ளனர்.
இதனிடையே, போதைப்பொருள் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை (அக். 28) ஸ்ரீகாந்த், புதன்கிழமை (அக். 29) கிருஷ்ணா ஆகியோர் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. இந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜாராகவில்லை.
வேறொரு நாளில் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தரப்பில் அமலாக்கத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.