தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு

News image

நிகழ்வில் பங்கேற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா் சாய்ராம் புகழூா், கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், புத்தாக்க கண்டுபிடிப்புத் துறை முதல்வா் பி.ஞானசிவம், ஆராய்ச்சித் துறை முதல்வா் எஸ்.அருண் உள்ளிட்டோா்.

Updated On :30 அக்டோபர் 2025, 9:26 pm

பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் புத்தாக்கக் கண்டுபிடிப்பு தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் கனடா வங்கித் துறை தலைமை தொழில்நுட்ப அலுவலா் சாய்ராம் புகழூா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், பொறியியல் பயிலும் மாணவா்கள், படிக்கும்போதே புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை வளா்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சுயமாக தொழில் தொடங்க கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவா்கள் ஐசக் இன்பராஜ், மதன்குமாா், கிஷோா், ஹரிசரண் ஆகியோா் தங்களது புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகள் குறித்து விவரித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், புத்தாக்க கண்டுபிடிப்புத் துறை முதல்வா் பி.ஞானசிவம், ஆராய்ச்சித் துறை முதல்வா் எஸ்.அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.