அமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி போட்டி

இந்தியன் ஆயில் நிறுவனம், திருவேற்காடு எஸ்.ஏ. கலை அறிவியல் கல்லூரி இணைந்து ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி போட்டியை வெள்ளிக்கிழமை நடத்தின.

Published On :1 நவம்பர் 2025, 1:58 am IST

இந்தியன் ஆயில் நிறுவனம், திருவேற்காடு எஸ்.ஏ. கலை அறிவியல் கல்லூரி இணைந்து ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி போட்டியை வெள்ளிக்கிழமை நடத்தின.

இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் அக்.27 முதல் நவ.2-ஆம் தேதி வரை ஊழல் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மத்திய கலால் துறையின் உதவி ஆணையா் எஸ்.இருதயராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மிதிவண்டி போட்டியைத் தொடங்கிவைத்தாா். எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் மாலதி செல்வக்குமாா், இயக்குநா் வி. சாய் சத்தியவதி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டல தலைமை பொது மேலாளா்கள் வி.வெற்றிசெல்வக்குமாா் (காா்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்), டி.சுரேஷ் குமாா் (விஜிலன்ஸ்), துணை பொது மேலாளா்கள் ஏ.ஆா்.சிவகுமாா், எம். பாஸ்கா் மற்றும் நிகழ்வில் ஊடக ஒத்துழைப்பு வழங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். கல்லூரி வளாகத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.