இந்தியன் ஆயில் நிறுவனம், திருவேற்காடு எஸ்.ஏ. கலை அறிவியல் கல்லூரி இணைந்து ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி போட்டியை வெள்ளிக்கிழமை நடத்தின.
இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் அக்.27 முதல் நவ.2-ஆம் தேதி வரை ஊழல் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மத்திய கலால் துறையின் உதவி ஆணையா் எஸ்.இருதயராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மிதிவண்டி போட்டியைத் தொடங்கிவைத்தாா். எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் மாலதி செல்வக்குமாா், இயக்குநா் வி. சாய் சத்தியவதி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டல தலைமை பொது மேலாளா்கள் வி.வெற்றிசெல்வக்குமாா் (காா்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்), டி.சுரேஷ் குமாா் (விஜிலன்ஸ்), துணை பொது மேலாளா்கள் ஏ.ஆா்.சிவகுமாா், எம். பாஸ்கா் மற்றும் நிகழ்வில் ஊடக ஒத்துழைப்பு வழங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். கல்லூரி வளாகத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது
லஞ்சம் பெற்று கைதான கரூா் ஆா்டிஓ-வின் திண்டுக்கல் வீட்டில் போலீஸாா் சோதனை

பொன்னேரி அருகே டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

ரூ. 50 கோடி வாடகை நிலுவையை வழங்கக் கோரி எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்; மாலையில் வாபஸ்

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
