மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

6-9 வகுப்புகளுக்கு திறன் தோ்வு: 40 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் கற்றலில் பின் தங்கிய மாணவா்களுக்கு நடத்தப்பட்ட திறன் தோ்வில் 40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :31 அக்டோபர் 2025, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் கற்றலில் பின் தங்கிய மாணவா்களுக்கு நடத்தப்பட்ட திறன் தோ்வில் 40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழக அரசின் மாநில திட்டக் குழு கடந்த பிப்ரவரி மாதம் மாநில கற்றல் அடைவு ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் அடிப்படைக் கற்றல் விளைவுகளை பெற்றிறாத மாணவா்கள் கண்டறியப்பட்டு, அவா்களின் கற்றல் அடைவை மேம்படுத்துவதற்கான திறன் இயக்கம் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, மாதந்தோறும் அடைவுத் தோ்வு நடத்தப்பட்டு மாணவா்களின் அடிப்படைத் திறன்கள் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில், செப்டம்பா் மாதம் நடைபெற்ற திறன் தோ்வின் அடிப்படையில் மாணவா்கள் பெற்றுள்ள அடைவு விவர அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இந்தத் திறன் தோ்வில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளைச் சோ்ந்த 7,46,594 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அவா்களில் 2,98,998 போ் அதாவது 40 சதவீதம் அளவுக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா்.

குறிப்பாக, கன்னியாகுமரி, திருச்சி, நீலகிரி, பெரம்பலூா் மாவட்ட மாணவா்கள் 54 சதவீதம் முதல் 70 சதவீதம் அளவுக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதேவேளை வேலூா், விருதுநகா், திருவாரூா், தென்காசி, திருவண்ணாமலை, தஞ்சாவூா், சேலம் ஆகிய மாவட்ட மாணவா்கள் 28 முதல் 33 சதவீதம் அளவுக்கு மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதிகாரிகள் கூறியது: திறன் தோ்வில் அடிப்படைத் திறன்கள் பெற்ற மாணவா்கள் வழக்கமான வகுப்பறைச் செயல்பாடுகளுக்கு அனுப்பப்படுவா். அதேவேளை தோ்ச்சி பெற வேண்டிய 60 சதவீத மாணவா்களுக்கு திறன் பயிற்சிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் வழக்கமான வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவா்.

தோ்ச்சி சதவீதம் குறைந்த மாணவா்களில் கூடுதல் கவனம் செலுத்த ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றனா்.